ஐஸ்வர்யா ராய் படத்தை வரைந்ததால் முதல் பரிசு வாங்கினேன்.. முன்னணி நடிகரின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமாகி இப்பொழுது ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்துள்ள திரைப்படம் பத்து தல படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். அப்பொழுது மேடையில் சிம்பு பேசியது பலரையும் வெகுவாக கவர்ந்து எடுத்தது அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. எல்லோருக்கும் வணக்கம் பத்து தல ரிலீஸ் ஆகுவதால் டென்ஷனில் இருக்கிறேன். என்னுடைய குருநாதர் கமலஹாசன், மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான் எல்லோரும் இங்கே இருக்கிறார்கள்.

அவர்கள் முன் பேச பதற்றமாக இருக்கிறது எல்லோருக்கும் தெரியும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று இப்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது மணிரத்தினம் தான் வாய்ப்பு கொடுத்தார். நான் கஷ்டமான சூழ்நிலையில் இருந்த பொழுது செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் நான் அவரை சின்ன குழந்தையாக பார்க்கிறேன் காரணம் குழந்தைகள் மட்டும் தான்..

தனக்கு என்ன வேணுமோ அடம்பிடித்து பெற்றுக் கொள்வார்கள் அந்த மாதிரி தான் மணிரத்தினம் தான் நினைக்கிறது வரும் வரைக்கும் விடவே மாட்டார். ஷூட்டிங் காலையில் போறது எனக்கு கஷ்டமாக இருக்கும். நான் ஒரு இரவு பிரியன்.. இன்னைக்கு நான் சரியான நேரத்தில் ஷூட்டிங் போறதுக்கு மணிரத்னம் சார் தான் காரணம்.. இந்த இரண்டாம் பாகத்தில் ரசிகர்களாகிய உங்களை போல விக்ரம், ஐஸ்வர்யா, கார்த்தி, திரிஷா போர்ஷன் பார்க்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

இன்னும் இரண்டு பார்ட் கூட எடுங்கள் நாங்க பார்த்துட்டு இருப்போம்.. சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் பொழுது என்னை ஓவியம் வரைய சொன்னார்கள். எனக்கு வரைய தெரியல நான் ஐஸ்வர்யா ராயை வரைந்தேன். முதல் பரிசு கொடுத்தார்கள் நான் வரைந்ததால் முதல் பரிசு கிடைக்கவில்லை அதில் ஐஸ்வர்யாராய் இருந்ததால் தான் முதல் பரிசு கிடைத்தது. குந்தவையா, நந்தினியா என கேட்கிறார்கள் இரண்டு கண்களில் எது வேண்டுமென்று கேட்டால் நான் என்ன பண்ண முடியும் என்றார்.

Leave a Comment