அந்த விஷயத்தில் நான் ரொம்ப வீக்.. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்

கன்னட பெண்ணான நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இவர் தெலுங்கில் நடித்த கீத கோவிந்தம், டியர் காம்ரேட் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ஒரு கட்டத்தில் தமிழில் இவர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நடித்து என்ட்ரி ஆனார்.

முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது.  சிறு இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார். அந்த படம் கடந்த பொங்கலுக்கு  வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் 300 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது அதனை தொடர்ந்து தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பு அள்ளி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு இருக்கும் பழக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. எனக்கு சின்ன சின்ன விஷயங்களும் முக்கியம்.. நான் காலையில் எழுந்ததும் என்னுடைய செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவேன் நண்பர்களை பார்ப்பேன் அது என்னை மகிழ்ச்சியாகும்..

வார்த்தைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை அதனால் யாராவது ஏதாவது சொன்னால் எனக்கு வருத்தம் ஏற்படும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நான் டைரியில் எழுதி வைப்பேன்.. நான் வீட்டில் இருந்தால் மரியாதைக்காக நான் எல்லோர் காலிலும் விழுவேன் வீட்டில் வேலை செய்யும்  House help செய்பவரின் காலில் கூட விழுவேன்..

இதில் கூட வேறுபடுத்தி பார்க்க மாட்டேன் இப்படி எல்லோரையும் மதிப்பேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா பேசி உள்ளார் விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுக்குள் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment