விஜயை வைத்து படம் பண்ணிய நான் தெருகோடியின் நிற்கிறேன்..! புலம்பும் பிரபல இயக்குனர்..!

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை கண்டு வருபவர் தளபதி விஜய் இவர் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது அதனைத் தொடர்ந்து தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ,  ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அவ்வபோது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.

அண்மையில் கூட விஜய் எதிரிகளை அடித்து நொறுங்குவது போல இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் முடித்து போஸ்ட் பிரமோஷன் வேலைகள் நோக்கி நகர படக்குழு திட்டமிட்டுள்ளது ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து ஓடுவதால் படகுழு தற்பொழுது அப்செட்டில்  இருக்கிறது.

இது இப்படி இருக்க விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யை வைத்து லவ் டுடே படத்தை எடுத்த இயக்குனர் தற்பொழுது மோசமான நிலைமையில் இருக்கிறாராம் அதனை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். லவ் டுடே திரைப்படம் விஜய் கேரியரில் மிக பெரிய ஒரு வெற்றிப்படம் மேலும் அதிக ரசிகர்களை பெற்று தந்ததும் இந்த திரைப்படம் தான்.

vijay
vijay

இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பாலசேகரன் தற்போது மோசமான நிலைமையில் இருக்கிறார்.இதனால் விஜயை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என அவரும் பல தடவை முயற்சி செய்து உள்ளார் ஆனால் விஜய்யை சுற்றி இருக்கும் வேலையாட்கள் தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை தான் சொல்லும் செய்தியையும் அவர்கள் விஜய் காதுக்கு கொண்டு செல்லவில்லை என கூறினார். விஜய் இன்று 100 கோடி சம்பளத்தில் நிற்கிறார். ஆனால் அவரை வைத்து படம் பண்ணிய நான் தெருக்கோடியில் இருக்கிறேன் என விஜய்யை பார்க்க முடியாமல் ஆதங்கத்தில் இப்படி சொல்லி உள்ளார்.

 

Leave a Comment