மாலை சூடி தாலி கட்டிக்க நான் ரெடி.! பாண்டியன் ஸ்டோர் சித்ரா அதிரடி அறிவிப்பு

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு கூட அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனா சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளன அந்த வகையில் தற்போது அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகையாக விளங்கியவர் முல்லை என்கின்ற விஜே சித்ரா.இவர் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது அதிக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

மேலும் இவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது மற்றும் தனது ரசிகர்களிடம் நேரங்களில் நேரடியாக உரையாடுவது போன்றவற்றின் மூலம் பல கோடி ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் ரசிகர்களிடம் நேரடியாக உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர் உங்களுக்கு எப்பொழுது கல்யாணம் என கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த சித்ரா நான் திருமணம் செய்துகொள்ள இரண்டு வருடங்கள் ஆகும் ஆனால் என் வீட்டில் தற்போது வரன் பார்த்து இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர் மட்டும் நெட்டிசன்கள் அப்போது நாங்களும் பொண்ணு கேட்டு வருகிறோம் என கூறி கிண்டலடித்து வருகின்றனர். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவர் திருமணம் ஆனபிறகும் காதலிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளதால் இது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது பிடித்துப்போன சீரியலாக மாறியுள்ளது இதன் மூலமாகத்தான் பிரபலமானர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment