கண்ணா வயசானலும் தமிழ் சினிமாவில் நான் தான் கிங் விஜய் கிடையாது..! பிரபல தயாரிப்பு நிறுவனத்தை அலறவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் ஏவிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் தற்போது அதே நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைபடத்தை தயாரிப்பதில் இந்நிலையில் சம்பள விஷயத்தில் சூப்பர் ஸ்டாரை மனம் நோக வைத்துள்ளாராம்.

அந்தவகையில் தளபதி விஜயை வைத்து பிகில் என்ற திரைப்படத்தை தயாரித்த  நமது தயாரிப்பு நிறுவனமானது அதன் பிறகு பெரிய அளவில் பொருட்செலவு பயன்படுத்தி எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்க முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் வைரஸ் தாக்கம் என்று கூட சொல்லலாம்.

இது ஒரு பக்கமிருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடிபதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமானது இறுதிகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரபல இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்சமயம் வெளியிடாமல் இருப்பதற்கு ரஜினியின் சம்பள விஷயம் தான் காரணம் என பலரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினியின் சம்பளம் 100 கோடியை தாண்டிவிட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் அவருக்கு 70 கோடி வரை சம்பளம் பேசி உள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

ஆனால் ரஜினிக்கு பின்னே இருக்கும் விஜய்க்கு 100 கோடி சம்பளம் கொடுக்கும் வகையில் நான் என்ன அவ்வளவு இளக்காரமா போய்விட்டனா என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடும் கோபத்தில்  உள்ளாராம். பின்னர் ரஜினியின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் ரஜினியின் சம்பளத்தை கொடுத்து அவரை கமிட் செய்துள்ளார்களாம்.

rajini-21
rajini-21

Leave a Comment