அந்த போட்டோவில் இருப்பது நான் கிடையாது.! கடுப்பாகி கோபத்தில் கத்திய வாணி போஜன்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக வளம் வருபவர் நடிகை வாணி போஜன். இவர் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல்களில் கதாநாயகியாக மாறி பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருவதற்குள் பல நடிகர்களுடன் நடிகை வாணி போஜன் அவர்கள் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஏடாகூடமாக பரவி வந்த வதந்திகளுக்கு கடுப்பாகி ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை வாணி போஜன். அதாவது நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களைப் பார்த்து கோபப்பட்டு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார் அந்த வகையில் ஒரு செய்தியில் வாணி போஜன் புகைப்படத்தோடு வேறொரு நபர் புகைப்படத்தை சேர்த்து வைத்த புகைப்படத்தை பார்த்த உடனே நடிகை வாணி போஜன் இது நான் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தெய்வமகள் சீரியலில் நடந்த சம்பவத்தை பார்த்து ஒரு செய்தியாக மாற்றி இருப்பதையும் பார்த்து கோபப்பட்டு இருக்கிறார் நடிகை வாணி போஜன் மேலும் நான் புடவை கட்டி வந்ததை பாசங்கள் பார்ப்பதை விட சோசியல், youtube என்ற பெயரில் நான் அட்ஜஸ்ட் பண்ணுவதை விட ஜூம் பண்ணுவது என் தப்பு கிடையாது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அசோக்செல்வன் உடன் இருந்த கிசுகிசுவிற்கு அவர் என் தம்பி மாதிரி என்று அந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை வாணி போஜன். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment