நான் ஒரு நல்ல நடிகையே கிடையாது.. அதிரடியாக பேசிய ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பொதுவாக ஒரு சில நடிகைகள் நடித்தாள் ஹீரோயினாக நடிப்பேன் இல்லையென்றால் முக்கிய கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என இருப்பார்கள் ஆனால் தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று மிகவும் சிறப்பாக நடித்துக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் பெற்று வரும் நடிகைகளும் இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் ரம்யா கிருஷ்ணன்.

ரஜினி நடிப்பில் வெளியாகிய படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார் ரம்யா கிருஷ்ணன் இப்பொழுது பேரையும் புகழையும் பெற்றிருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முத்திரையை பதிக்க மிகவும் போராடியுள்ளார். ரம்யா கிருஷ்ணன் பிரபல யு டியூப் இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் தமிழில் பணிபுரிந்த பிறகு எதற்காக தெலுங்கு பக்கம் போனீர்கள்  என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

அதற்கு பதில் அளித்த ரம்யா கிருஷ்ணன் நான் அறிமுகமான நீண்ட நாட்களாக சினிமா வாழ்க்கையில் என்னால் வெற்றி பெற முடியவில்லை தமிழில் நான் நடித்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பும் கிடைக்கவில்லை அதனால் தான் தெலுங்கு பக்கம் சென்றேன் முதல் வசந்தம் திரைப்படம் என்னதான் ஹிட் அடித்தாலும் எனக்கு சினிமா கேரியரில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க உறுதுணையாக இல்லை.

அதேபோல் என்னுடைய ஒரே ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு என்னுடைய அம்மா நான் எவ்வளவு காலம் திரைத்துறையில் தாக்குப்பிடிப்பேன் என்று கேட்டார். இவ்வாறு கூறிய அவர்  மேலும் அவர் கூறியதாவது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்களை கொடுத்தார் 1989இல் தெலுங்கில் வெளியான கே விஸ்வநாதன் சூத்திர தருளு என்ற திரைப்படத்தின் மூலம் ரம்யா கிருஷ்ணன் பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.

இந்த திரைப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றது அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் வாழ்க்கையில் விடிவு காலம் பிறந்தது பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதமாக மிரட்டி இருந்தார் அதேபோல் கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் பட்டையை கிளப்பியது இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.