அஜித்தின் தீவிர ரசிகை நான் – அஜித் சார் என்னை செல்லமாய் இப்படி தான் கூப்பிடுவார் – நாயகி சீரியல் நடிகை சூப்பர் பேட்டி.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருபவர் நடிகை பாப்ரி கோஷ். தமிழில் இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற தமிழ் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் திடீரென தனது ரூட்டை மாற்றி கொண்டார்.

சின்னத்திரையில் இவர் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். பாண்டவர் இல்லம், பூவேஉனக்காக, சித்தி-2, மகராசி ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவரிடம் பல்வேறு விதமான. அதிலும் குறிப்பாக அஜித், விஜய், நயன்தாரா ஆகியோர் குறித்து பாப்ரி கோஷ் கூறியது :

நான் அஜித்தின் தீவிர ரசிகை அப்போ நினைத்து பாருங்கள் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு எனக்கு எப்படி கிடைத்திருக்கும் என்று அஜித் சார் வந்து பேசினால் கேட்டுகிட்டே இருக்கணும்ன்னு தோணும் அவ்வளவு இனிமையாக பேசுவார் அஜித் சார்கிட்ட ரொம்ப பிடிச்சது ஏனென்றால் எல்லோருடைய பெயரும் ஞாபகம் வைத்து இருப்பார் ஒவ்வொருத்தரையும் மரியாதையா அழைப்பார் என்னை பார்ப்ரி ஜி என்று அழைப்பார் அதை கேட்கும் பொழுது அவ்வளவு சந்தோசமாக இருக்கும்.

அவர் கூறியதை நான் அப்படியே நாயகி சீரியல் செட்டில் சொல்றப்ப அதற்கு அதுக்கு எல்லோரும் அப்ப நாங்களும்  பாப்ரி ஜி என்று கூப்பிடனும்மா அப்படி எல்லாம் முடியாது என்று சொல்லி கலாய்ப்பார்கள். சர்க்கார்ல நான் நல்ல ரோல் பண்ணினேன் பைரவா படத்தில் கூட விஜய் சார்கிட்ட அவ்வளவா பேசினதில்ல ஆனால் விஜய் சார் ரொம்ப ஜாலியா பேசுவார் ஜோக் எல்லாம் அடிப்பார் என கூறினார்.

ஒரு நாள் நான் கொஞ்சம் லேட்டாக வந்தேன் அவ்வளவுதான் என்னைப் பார்த்து நயன்தாரா அப்படி ஒரு கத்து ஏய் பாப்ரி என்ன இவ்வளவு லேட்டா வர்ற எஎன சொல்ல உடனே நான் பயந்து போய் விட்டேன் அதற்கு அப்புறம் தான் சொன்னது தான் ஹைலைட். அவர் சொன்னது என்னன்னா இவ்வளவு லேட்டா வந்தா நம்ம எப்படி விளையாடுகிறது என கூறினார்  சொன்னார். நயன்தாரா தலைகனம் இல்லாத நல்ல பழகும் தன்மை கொண்டவர் என கூறினார்.

Leave a Comment