தனக்கு வேண்டியதை படமாக எடுக்க எந்த எல்லைக்கும் செல்வார் தான் ஹச். வினோத் புகழ்ந்து – போனி கபூர் அதிரடி பேட்டி

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆண்கள் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர் நடிகர் அஜித் குமார். காரணம் இவரது ஆக்ஷன், டயலாக் ஆகியவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதேசமயம் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதராக இருக்கிறார். அதனால்தான் என்னவோ அவரை பார்க்க அனைவரும் ஆசைப்படுகின்றனர்.

ஆனால் அது நடக்காது இருப்பினும் வருடத்திற்கு ஒரு முறையாவது அஜித்தை திரையரங்கில் பார்த்து விட வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய ஆசை ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு படமும் வெளிவராமல் போனதால் 2022 – ம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை படம் கோலாகலமாக படம் ரிலீசாக இருக்கிறது.

நாம் எதிர்பார்த்ததைவிட படமும் பிரம்மாண்ட முறையில் வெளியாகியிருக்கிறது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஆகிய நான்கு மொழிகளிலும் முதல்முறையாக அஜீத் படம் வெளியாகிறது மேலும் பெரும்பாலான திரையரங்குகளை தன் வசப்படுத்திக் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யும் கொடுத்து வருகிறது.

இதனால் AK ரசிகர்கள் திரையரங்கு மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் பதிவு முடிந்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி வலிமைப்படுத்தி எல்லாமே பாசிட்டிவாக இருப்பதால் நிச்சயம் நாம் எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டையை நடத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது  : இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க காரணம் அஜித்குமாரின் கண்கவர் திறமை ஆளுமை உயர் தொழில்நுட்பம் மற்றும் காட்சிகளில் இருந்த அதிரடி, ஆக்ஷன் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

இப்படத்தை உருவாக்க நாங்கள் ஒரு குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள் சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் அஜித் குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக இயக்குனர் வினோத் தனக்கு என்ன தேவையோ அதற்காக எந்த அளவு வேண்டுமானாலும் இறங்கி சென்று அதை எடுக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது அது போலத்தான் வலிமை படத்தையும் மிக சிறப்பாக ஒவ்வொன்றாகத் தேடி கண்டுபிடித்து எடுத்துள்ளார் நிச்சயம் ரசிகர்கள் எதிர் பார்த்தபபடி இருப்பதாக கூறி உள்ளார்.

Leave a Comment