தன்னுடைய மகள் விளையாடும் சுட்டி தனத்தைப் ரசித்து வீடியோ எடுத்த ஸ்ரேயா சரண்.!வைரலாகும் வீடியோ.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண் இவர் 2001 ஆம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதேபோல் தமிழ் சினிமாவில் முதன் முதலாக எனக்கு 20 உனக்கு 18 என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் இவர் நடிப்பில் வெளியாகிய மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி அழகிய தமிழ்மகன், என பல திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், புலி, உத்தமபுத்திரன், சிக்குபுக்கு என பல திரைப்படங்கள் இருக்கின்றன. தமிழில் ஒரு ரவுண்ட் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால் இவர் கருப்பு காமெடி நடிகருடன் இணைந்து நடனம் ஆடியது தான் இவர் சினிமா கேரியரை அடியோடு மாறியது. ஏனென்றால் கருப்பு காமெடி நடிகருடன் நடனமாடிய நடிகை எனக்கு ஜோடியா என பல முன்னணி ஹீரோக்கள் தலைதெறிக்க ஓடினார்கள் அதனால் இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

பட வாய்ப்பு சரியாக அமையாததால் 2012ஆம் ஆண்டு உருசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது ராதா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இவர் தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதை பல மாதங்களுக்கு பிறகுதான் வெளியே கூறினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சமீபத்தில் தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அதேபோல் தற்போது தன்னுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளின் சுட்டித்தனத்தை ரசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் குழந்தையின் மழைலை பேச்சையும் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது எனக்கு நீ எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறாய் என்றும் என் இதயம் என்றும் உன்னுடைது தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் வீடியோ உடன் சேர்த்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் மகள் செய்யும் கியூட் ரியாக்ஷன்  இடம் பெற்றுள்ளன.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment