முதல் நாளில் “தி லெஜண்ட்” திரைப்படம் – அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் தனது கடை விளம்பரத்திற்காக முதலில் நடித்து வந்தார். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக நடிக்க தொடங்கி உள்ளார் தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். 200 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ஊர்வசி ரவுத்தேலா, யோகி பாபு, நாசர், பிரபு, விவேக், மயில்சாமி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தி உள்ளனர். தி லெஜன்ட் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்பவர்கள் இணைந்து இந்த படத்தை இயக்கி உள்ளனர் சரவணன் அருள் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் ஒரு வழியாக ஜூலை 28ஆம் தேதி நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்து வந்துள்ளதால் ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கும் தற்பொழுது இந்த படம் பிடித்துள்ளதால் கூட்டம் கூட்டமாக இந்த திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

தி லெஜெண்ட் திரைப்படம் தமிழகத்தையும் தாண்டி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என கூறப்படுகிறது முதல் படத்தையே பான் இந்திய படமாக ரிலீஸ் செய்து உள்ளார் சரவணா ஸ்டோர் அருள்.

நிச்சயம் முதல் நாளில் மிக பிரம்மாண்டமான ஒரு தொகையை அள்ளி தான் நிற்கும் என முன்பு பேசப்பட்டது அதற்கு ஏற்றார் போல தற்பொழுது தகவல்களும் கிடைத்துள்ளது. தி லெஜன்ட் திரைப்படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Comment