உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் “மும்பை இந்தியன்ஸ்” மொத்தம் இத்தனை பேரா.?

Indian Team : இந்திய அணி  தற்பொழுது ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது சூப்பர் போருக்கு தகுதி பெற்ற நிலையில் அடுத்ததாக பாகிஸ்தான் உடன் முதலில் பல பரிசை நடத்த இருக்கிறது.

ஆசியக் கோப்பை முடிந்த பிறகு இந்திய அணி உலக கோப்பைக்கு தயாராகும். இந்த நிலையில் உலக கோப்பையில் விளையாடப் போகும் 15 வீரர்கள் பற்றி நமக்கு தகவல் கிடைத்துள்ளது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் மற்றவர்களின் விவரமும் நமக்கு தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் உலக கோப்பை போட்டிகளில் பல அனுபவ வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால்  மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாண்ட வீரர்கள் உலக கோப்பைக்கு அதிக பேர் தேர்வாகி இருக்கின்றனர் என்பது தான் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. மும்பை இந்தியன்ஸ்  (ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஜஸ்வத் பம்ரா, சூரியகுமார் யாதவ்) ஆகியவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ்   (ரவீந்திர ஜடேஜா)  குஜராத் டைட்டன்ஸ் (சுமன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது சமி) ஆகிய மூன்று பேர் தேர்வாகி உள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரண்டு வீரர்கள் (விராட் கோலி, முகமது சிராஜ்) லக்னோ (கே எல் ராகுல்) டெல்லி கேப்பிடல்   இரண்டு பேர் (அக்ச்சர் பட்டேர், குல்திப் யாதவ்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  இரண்டு பேர் ( ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர்).. சன்ரைசஸ் ஹைதராபாத் பஞ்சாப் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை சார்ந்த எந்த ஒரு அணி வீரரும் இடம் பெறவில்லை..