துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்குமார் வென்ற பதக்கங்கள் எத்தனை தெரியுமா.? வெளிவந்த தகவல்.

நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் தற்பொழுது விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக தற்போது நடிகர் அஜித்குமார் ரெடியாகி வருகிறார்.

இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கோக்கேன் மற்றும் பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து தனது 62 வது திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் குமார் அண்மையில் திருச்சியில் நடந்த 47-வது மாநில அளவிலான  துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது இதில் அஜித் கலந்து கொண்டார். துப்பாக்கி சுடும் போட்டி முடிந்த பிறகு அஜித் வெளியே வந்தார் அதற்குள் ரசிகர்கள் அஜித் வந்த செய்தியை கேட்டு அந்த இடத்தையே முற்றுகையிட்டனர்.

இதனால் அஜித் வெளியேற முடியாமல் சில மணி நேரம் அந்த கட்டிடத்துக்குள்ளையே  இருந்தார். கடைசியில் ரசிகர்களை சந்தித்து அசத்தினார் பின் போலீசார் உதவியுடன் அங்கிருந்து புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த செய்தியும் மிகப்பெரிய அளவில் வைரலானது. அஜித் திருச்சியில் கலந்து கொண்ட அந்த போட்டி 24ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூலை 31 வரை நடைபெறும் இதில் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அஜித் கடந்த 27ஆம் தேதி மாஸ்டர் என்ற பிரிவில் கலந்து கொண்டார். அதன் பின் நிறைய பிரிவின் கீழ் போட்டியிட்டுள்ள அஜித்திற்கு தங்கம் 4 வெள்ளி 2 பதக்கங்கள் மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஆனால் இது சம்பந்தமாக அஜித்தின் எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை..

Leave a Comment