“பொன்னியின் செல்வன்” படத்தை உருவாக்க மணிரத்தினம் எடுத்துக் கொண்ட நாட்கள் எத்தனை தெரியுமா.? மொத்த உண்மையையும் உடைத்த நடிகர் கார்த்தி.!

தமிழ் சினிமா உலகில் வரலாற்று நாவல் உண்மை கதைகளை மையமாக வைத்து பல வெற்றி படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இப்பொழுது கூட பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். இந்தப் படத்தை எடுக்க பல நடிகர்கள் ஆசைப்பட்டாலும் இதை ஒரு வழியாக மணிரத்தினம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்துள்ளார்.

படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயபிரகாஷ், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, விக்ரம், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இருந்து தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை வெளிவந்த நிலையில் நேற்று இந்த படத்தில் இருந்து “பொன்னி நதி” என்ற பாடல் வெளியாகி உள்ளது. மக்களுக்கும் தற்பொழுது அந்த பாடல் ரொம்ப பிடித்து போய் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த பாடலின் வெளியீட்டு விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராஜ் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்பொழுது பேசிய நடிகர் கார்த்தி படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். படத்திற்காக மொத்த குழுவினரும் ரொம்ப உழைத்துள்ளதாக கூறினார் மேலும் பொன்னியின் செல்வன் செட்டை பார்க்க எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும் இயக்குனர் மணிரத்தினம் நேர்த்தியாக இந்த படத்தை இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் தொடங்கிய பொழுது லாக்டவுன் வந்து விட்டதால் எல்லாமே கேள்விக்குறியாகி போனது ஆனால் இரண்டு பாகங்களையும் மணிரத்தினம் மொத்தமாக 120 நாட்களுக்குள் எடுத்து விட்டதாக கூறி ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். மேலும் பேசிய அவர் பொன்னியின் செல்வன் சூட்டிங்கிற்காக காலையில் 3 மணிக்கு எழுந்து விடுவோம் என்றும் இனி இது மாதிரி ஒரு படம் எடுக்க யாராலும் முடியவே முடியாது என கூறி அதிர வைத்தார்.

Leave a Comment