கேரளாவில் வியாபாரமான லியோ திரைப்படம் இத்தனை கோடியா.? டாப் நடிகர்களுக்கு பயத்தை காட்டிய தளபதி.

கோடான கோடி ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் கட்டி இழுத்து உள்ளவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருந்தது. ஆரம்பத்தில் ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்தாலும் போகப்போக குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

அதன் விளைவாக  பல்வேறு இடங்களில் வசூல் வேட்டை நடத்தியது இதுவரை மட்டுமே  300 கோடி மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனை தொடர்ந்து தளபதி விஜய் தோல்வியை காணாத இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் போதை பொருளை மையமாக வைத்து உருவாகும் என சொல்லப்படுகிறது அதனால் இந்த படத்தில் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், த்ரிஷா பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் தற்பொழுது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில்  லியோ படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல இடங்களில் வியாபாரமாகி உள்ளது என ஏற்கனவே தகவல்கள் எல்லாம் கசிந்தன

இந்த சமயத்தில் கேரளாவில் விஜயன் லியோ பட வியாபாரம் தொடங்கியுள்ளதாகவும் படத்தை 16 கோடி வரை வாங்க கேட்டிருக்கிறார்களாம்.. அந்த அளவிற்கு லியோ படத்தின் மீது  நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது இப்படி போகும் பட்சத்தில் லியோ படம் வியாபாரத்தின் மூலம் பலகோடி அள்ளும் என கணிக்கப்படுகிறது.

Leave a Comment