திடீரென சம்பளத்தை உயர்த்திய அனிருத் எத்தனை கோடி தெரியுமா.? ஏ ஆர் ரகுமான் லெவெலுக்கு உயர்ந்த மார்க்கெட்

சினிமா உலகில் டாப் நடிகர், நடிகைகள் எப்படி ஒரு படம் வெற்றி பெறும்போது கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்துகிறார்களோ அதே போல இயக்குனர்களும் சரி இசையமைப்பாளர்களும் சரி தனது படம் ஹிட் அடிக்கும் போது சம்பளத்தை உயர்த்துகின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர் ஏ ஆர் ரகுமான் தற்போது அவரது இடத்தை ஒருவர் பிடித்திருக்கிறார்.

இந்த பிரபலம் வேறு யாரும் அல்ல இளம் இசையமைப்பாளர் அனிருத் தான்.. இவர் முதலில் நடிகர் தனுஷின் 3 படத்திற்கு இசையமைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு இவர் அஜித்தின் வேதாளம், விஜயின் மாஸ்டர், கமலின் விக்ரம், ரஜினியின் பேட்ட, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் என சொல்லிக்கொண்டே போகலாம்

அந்த அளவிற்கு பல டாப் ஹீரோக்களின் படங்களில் சூப்பராக இசையமைத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் தற்பொழுது இவருக்கெனவே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது மேலும் இவருடைய பாடல் மற்றும் இசையை கேட்கவே பலர் திரையரங்குகளுக்கு போகிறார்கள் அந்த அளவிற்கு தற்போது வளர்ந்திருக்கிறார்.

இப்பொழுது கூட ரஜினியின் ஜெயிலர் மற்றும் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதனால் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட சற்று உயர்த்தி வாங்குகிறார் என கூறப்படுகிறது அதன்படி தற்பொழுது ஒரு புதிய படத்திற்கு இசையமைக்க சுமார் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

5 கோடி என்பது இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய ஒரு அமௌன்ட் அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான் இதுவரை 5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தார் தற்பொழுது அவர் லெவலுக்கு அனிருத் சம்பளம் வாங்குவதால் ஏ ஆர் ரகுமானுக்கு இணையாக அனிருத்  வளர்ந்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment