கலகத் தலைவன் திரைபடம் எப்படி இருக்கு.! இதோ முழு விமர்சனம்…

தயாரிப்பாளர், அரசியல்வாதி, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்குபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கலகத் தலைவன் இந்த திரைப்படத்தை மகிழ் திருமணி அவர்கள் இயக்கியுள்ளார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது கலகத் தலைவனின் திரைப்படத்தில் எப்படி தன்னுடைய நடிப்பை காட்டியுள்ளார் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.எதிர்பார்ப்பை கலகத் தலைவன் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா என்று திரை விமர்சனத்தை பார்ப்போம்.

ட்ரூபேட்டார் எனும் கார்ப்பரேட் நிறுவனம் குறைவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தரும் ஒரு வாகனத்தை கண்டுபிடிக்கிறது. அந்த வாகனத்தை மார்க்கெட் இடம் அறிமுகம் செய்ய தயாராக இருக்கிறது ஆனால் அந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை அதிகமாக காற்று மாசுவை உண்டாக்கும் என்று அதன் பின்பு தான் தெரிய வருகிறது.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் யாரும் இந்த வாகனத்தை வாங்க மாட்டார்கள் என்று இந்த உண்மை தெரிந்த நபர்களிடம்  ட்ரூபேட்டார் நிறுவனத்தின் உரிமையாளர் இந்த விஷயத்தை வெளியே கசிய கூடாது என்று அவர்களிடம் கூறுகிறார்.

ஆனால் இந்த விஷயம் எப்படியோ எதிரி நிறுவனத்திற்கு தெரிய வருகிறது இதனால் ட்ரூபேட்டார் அறிமுகம் செய்த இந்த வாகனம் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்த நிறுவனம் நஷ்டத்தில் ஓடிகொண்டு இருக்கும் நிலையில் மேலும் அடி வாங்கியது. தன்னுடைய போட்டி நிறுவனத்திற்கு இந்த விஷயத்தை யார் கூறினார் என்று கண்டுபிடிக்க ட்ரூபேட்டார் நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் நியமனம் செய்கிறார் அவர்தான் ஆரவ்.

அதன் பிறகு ஆரவ் அடிமட்டத்தில் இறங்கி விசாரித்து ஒவ்வொருவரிடமும் பல உண்மைகளை வாங்கிக் கொள்கிறார் இறுதியில் இந்த அனைத்து கலக்கத்திற்கும் யார் காரணம் இந்த ரகசியங்களை வைத்து அந்த மறுமணவர் என்ன செய்கிறார்? என்ன செய்யப் போகிறார்? இதற்கும் கதாநாயகனுக்கும் என்ன சம்பந்தம் என்பதே படத்தின் மீதம் உள்ள கதை.

கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிகாட்டி உள்ளார் மேலும் வில்லனாக வரும் ஆரவ் அனைவரையும் மிஞ்சும் அளவிற்கு நடித்துள்ளார் ஒவ்வொருவரையும் தேடி தேடி கொடூரமாக வேட்டையாடும் ஆரோவின் நடிப்பு படத்திற்கு ஒரு மிகப்பெரிய தூணாக இருக்கிறது.

படத்தில் வரும் நிதி அகர்வால் எதற்காக இந்த படத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை முக்கிய வேடத்தில் தோன்றியுள்ள கலையரசனின் நடிப்பு ஓகே மகிழ் திருமேனி எடுத்துக்கொண்ட இந்தக் கதைகளும் பாராட்டுகளை குவித்து வருகிறது. மேலும் கதாபாத்திரங்களின் உழைப்பும் அற்புதமாக இருக்கிறது சிறு சிறு விஷயத்தை குறிப்பிட்டு காட்டும் மகிழ்திருமேனியின் இயக்கத்திற்கு கைத்தட்டல்கள் இடைவேளை காட்சி செம மாசாக இருக்கிறது.

ஆனால் தடம் என்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த திருமேனி இயக்கி உள்ள இந்த திரைபடம் சற்று கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் எதிர்பார்ப்புக்கு நிகரான விறுவிறுப்பு சற்று குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment