பல மொழித் திரைப்படங்களில் நடிப்பதால் அதிகமாக சம்பளம் கேட்கும் ராஷி கண்ணா அதுவும் எப்படி தெரியுமா.?

தமிழில் நடித்த பல நடிகைகளும் தற்பொழுது பல மொழித் திரைப்படங்களில் நடித்து தங்களது சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தவர் தான் ராஷி கண்ணா.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார் தமிழ் முதல் பாலிவுட் வரை தற்போது இவர் பிரபலமான நடிகையாக காட்சியளிக்கிறார் அதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்பு மட்டும் தான்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் தற்போது இவரது நடிப்பில் அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதே போல் தெலுங்கிலும் இவரது நடிப்பில் 2 திரைப்படங்கள் உருவாகி வருகிறது இதனை தவிர மலையாளத்தில் ஒரு திரைப்படமும் ஹிந்தியில் 2 வெப்சீரிஸ் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

சினிமாவையும் தாண்டி அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது மார்க்கெட்டை உச்சத்திற்கு எடுத்துப் போகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.

அதேபோல் தற்போதும் இவரைப் பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது ராஷி கண்ணா மற்ற நடிகைகளை விட தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக சம்பளம் கேட்டு வருகிறாராம் இவர் கேட்கும் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களும் இவரை வைத்து இனிமேல் திரைப்படங்களை இயக்கலாமா என யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

rashi khanna2
rashi khanna2

மேலும் இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் திரைப்படங்களில் நடிப்பதற்கு நீங்கள் அதிகமாக சம்பளம் கேப்பீங்களா எங்களுக்கு மிகவும் ஷாக் ஆக இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment