இயக்குனரை பற்றி பதிவு செய்த ஹிப் ஹாப் ஆதி.! எப்படி எல்லாம் பண்றாங்க பாருங்க.!

வெள்ளித்திரையில்  இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி.இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டதால் இவரும் தொடர்ச்சியாக கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்பொழுது வீரன் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹிப் ஹாப் ஆதி திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுவதுமே காமெடி ஆக்சன் திரைப்படமாகவே இருக்குமாம் இந்நிலையில் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் சில வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்.புகைப்படத்தை பதிவிட்ட ஆதி அந்த கருப்பு கண்ணாடி மாட்டிகிட்டு க்யூட்டா நிக்கிறாரே அவர்தான் எங்க டைரக்டர் ஏ.ஆர்.கே சரவணன்.

அவருக்கு ஒரு கோட்டை மாட்டி பிரேம்குள்ள நிக்க வெக்கறதுக்கு நாங்க பட்ட பாடிருக்கே எல்லா புகழும் காளி அண்ணனுக்கு என்று பதிவு செய்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வீரன் திரைப்படம் முடிந்து விட்டது.தற்பொழுது பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. எப்பொழுது படம் வெளியாகும் என்பது பற்றி அப்டேட் கொடுங்கள் என்றும் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment