பவித்ராவின் காதலரை பார்த்து செம்ம கடுப்பான ரசிகர்கள் – வைரல் புகைப்படம் இதோ.

சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் காலை, மதியம், இரவு என அனைத்து நேரங்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பப்படுகிறது. அதில் மதியநேர தொடர்களில் மக்கள் மிகவும் விரும்பிப் பார்க்கப்பட்ட தொடர் ஈரமான ரோஜாவே இந்த தொடரில் திரவியதுடன் இணைந்து மலர் என்ற கதாபாத்திரத்தில் பவித்ரா நடித்து வந்தார்.இந்த சீரியளை மக்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டன.

இந்த தொடரில் முதலில் பவித்ராவுக்கு ஜோடியாக குமரன் நடித்து வந்தார் பின்பு குமரன் அந்த கதையின் படி இறந்து போனதால் அவரது அண்ணன் வெற்றியை திருமணம் செய்து கொண்டார் மலர். இந்த வெற்றி மலர் ஜோடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடர் ஒரு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்துவிட்டது.

பின்பு அந்த சீரியல் முடிந்தவுடனேயே தென்றல் வந்து என்னை தொடும் என்ற புது சீரியலின் மூலம் வினோத்துக்கு ஜோடியாக ரீ-என்ட்ரி கொடுத்தார் பவித்ரா. இந்த சீரியலில் இவர் மிகவும் தைரியமான பெண்ணாக தோற்றமளிக்கிறார். தற்போது இந்த சீரியலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதைத்தவிர அப்பப்போ விஜய் டிவியில் நடக்கும் ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்வார். மீதி நேரம் இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ போடுவதை வழக்கமாக வைத்திருப்பார். இவர் இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் உரையாடிய போது இவரிடம் பலர் உங்கள் காதலர் யார் என கேள்வி கேட்பார்கள்.

இவரும் திடீரென ஒருநாள் இன்ஸ்டாவில் தனது காதலர் யார் என தெரிந்து கொள்ள ஒரு நேரத்தை குறிப்பிடுகிறேன். அப்பொழுது நீங்கள் வாருங்கள் என பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பவித்ரா ஒரு பொம்மை கேரக்டர் உடன் வீடியோ போட்டு இவர்தான் எனது காதலன் என விளையாடி உள்ளார்.

pavithra
pavithra
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment