நடிகராகவும்,இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வாலி,குஷி இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கென்று சினிமாவில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது.
இவ்வாறு இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த இவர் நியூ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஹீரோவாக நடித்து பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் கடைசியாக தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தின் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி,லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வந்த இறைவி திரைப்படத்தின் மூலம் இவர் சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றார். அதன்பிறகு இவர் நடிப்பில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளிவந்து கலவை விமர்சனத்தைப் பெற்றது.
தற்பொழுது எஸ் கே சூர்யா பொம்மை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தை சிறந்த இயக்குனரான ராதாமோகன் பொம்மை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் எஸ்கேப் சூர்யாவிற்கு ஜோடியாக சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
சைக்கோ த்ரில்லர் திரைப்படமான இத்திரைப்படத்தின் டிரைலர் பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எஸ் கே சூர்யா ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் தான் பொம்மை திரைப்படத்தின் டிரைலரை பற்றியும் கேட்டுள்ளார்கள் அதற்கு பதிலளித்து எஸ் கே சூர்யா கண்டிப்பாக ஜூலை மாதத்துடன் லாக் டவுன் முடியும் என்று எதிர்பார்ப்போம் என்று கூறியுள்ளார்.
Soon ….. hopefully we will be alright with the lockdown by July …. July will release the trailer of BOMMAI …. Date and time and by whom it is going to be released… will let U all know soon…. 👍👍👍 https://t.co/KclwwmmmQS
— S J Suryah (@iam_SJSuryah) June 18, 2021