தேசிய விருதை தட்டி சென்ற தனுஷ் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு.!

தமிழ் திரையுலகில் நடிகர்கள்,நடிகைகளின் நடிப்பை பார்த்து வருடம் வருடம் அவர்களைப் பாராட்டி விருது கொடுப்பது வழக்கம் அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்குரிய விருதினை யார் யார் எந்த நடிகர்கள் பெற்றுள்ளார்கள் என நேற்று லிஸ்ட் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது.

அந்த வகையில் பல திரைப்படங்கள் விருதுகளை வாங்கியுள்ளது ஆம் தனுஷும் விருதை வாங்கி உள்ளார் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்காக விருதை வென்றுள்ளார் அதை பற்றி தற்போது ஒரு அறிக்கையை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் அசுரன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது ஏனென்றால் அசுரன் திரைப்படத்தில் மிக ஆவலுடன் நடித்திருப்பேன் அதுமட்டுமல்லாமல் இயக்குனர் வெற்றிமாறனுடன் கை கோர்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அசுரன் திரைப்படத்திற்கு முன்பே நான் ஆடுகளம் திரைப்படத்திற்கான விருதை பெற்றிருப்பேன்.  இந்நிலையில் இரண்டாவது முறையாக அசுரன் திரைப்படத்திற்காக விருது வென்றதை எனக்கு ஒரு கனவாக இருக்கிறது மேலும் நிறைய பேருக்கு நன்றி கூறியே சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த வெற்றிமாறனுக்கு மிக மிக நன்றி என அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் நான் உங்களை முதன்முறையாக பாலுமகேந்திரா அவர்களின் அலுவலகத்தில் சந்தித்த பொழுது எனக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தது,நண்பனாக இருந்தது,உங்களுடன் சேர்ந்து இரண்டு திரைப்படங்களை தயாரித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது என அந்த அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் அந்த அறிக்கையில் தேசிய விருது ஜுரிகளுக்கும், தயாரிப்பாளர் தாணுவும் அசுரன் திரைப்படத்தில் தன்னுடன் நடித்தவர்களுக்கும்,இசையமைப்பாளர் ஜீவிபிரகாஷ்ஷுக்கும் மிக மிக நன்றி தெரிவித்துகொள்கிரேன் அதோடு முடிக்காமல் தனுஷ் இறுதியாக எண்ணம்போல் வாழ்க்கை என்று அந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள் அந்த அறிக்கை.

dhanush
dhanush

Leave a Comment