செம்பருத்தி சீரியலில் இருந்து ஆதியை மாற்ற சொன்ன ஜனனி.! அதிர வைக்கும் தகவல்கள் இதோ.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி இந்த சீரியல் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்துள்ளது.

ஏனென்றால் இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா கதாநாயகன் கதாநாயகியாகவும் நன்றாக நடித்து வருகிறார்கள்.

மற்றும் இந்த சீரியலில் ஜனனி அசோக் குமார் என்பவரும்இதில் நடித்து வந்தார். திடீரென ஒரு சில காரணங்கள் குறித்து இதிலிருந்து விலக்கப்பட்டார்.

இந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டதையே சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் வீடியோ காணொளியாக ஒரு செய்தியை கூறியிருந்தார்.

அதில் அவர் பாரத நாயுடு சொல்லுவது போல் செம்பருத்தி சீரியலில் அரசியல் எதுவும் பண்ண வில்லை என்றும் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் இருந்து ஒருவரை விளக்க வேண்டும் என்றால் அது ஆதி மட்டும் தான் ஏனென்றால் அவருக்கு தான் இந்த சீரியலில் துளிகூட நடிக்க விருப்பம் இல்லை அவருக்கு சினிமாவில் மீதுதான் அதிக ஆர்வம் இருக்கிறது அதனால் அவரை சினிமாவுக்கு அனுப்பிவிட்டு இந்த சீரியலில் வேற ஒரு நடிகரை தேர்ந்தெடுக்கலாம் என கூறியிருந்தார்.

Leave a Comment