சிம்பு, நயன்தாராவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நெல்சன் திலிப்குமார் – அன்ஸின் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது அந்த காரணத்தினால் நெல்சன் திலிப்குமார் வளர்ச்சி தற்போது தமிழ் சினிமாவில் எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறது.

இவரது திரைப்படங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாகவும் அதேசமயம் காமெடி கலந்து இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் இவரது படத்தை கொண்டாடுகின்றனர் மேலும் அந்த படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தி அசத்துகின்றன.

இதுவரை நெல்சன் திலிப்குமார் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து டாப் நடிகரான விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை எடுத்து வருகிறார் படத்தின் சூட்டிங் அண்மையில் முடிந்ததாக தகவல்கள் உலா வருகின்றன காரணம் படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு அனைவரும் எடுத்த புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக இணையதள பக்கங்களில் உலா வருகிறது.

ஏன் நெல்சன் திலீப் குமாரும், விஜய்யும் கட்டி தழுவிய புகைப்படம் கூட வெளியிடப்பட்டது. அந்த புகைப்படத்திற்கு நெல்சன் திலீப் குமார் “இது ஒரு அழகான தருணம்” என கூறினார் இதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்டமாக  பீஸ்ட் படக்குழு ரெடியாக இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நெல்சன் திலிப்குமார் சிம்புவின் வேட்டை மன்னன் படத்தின் மூலமாகத்தான் அறிமுகமாக வேண்டியது இருந்தது ஆனால் படம் பாதியிலேயே நின்று போனது. வேட்டை மன்னன் படத்திற்கு முன்பாகவே நயன்தாரா மற்றும் சிம்பு ஆகியோர்கள் நடித்த வல்லவன் திரைப்படத்திலேயே நெல்சன் திலீப்குமார் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

nayan-and-simbu
nayan-and-simbu
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment