வலிமை படத்தின் அப்டேட்காக காத்திருக்கும் சிம்பு பட இயக்குனர் அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.! தல மேல அவ்வளவு பாசமா..

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு சிறப்பாக வளம் வருவர் வெங்கட் பிரபு.

2007 ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதன்பின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல்வேறு ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து முன்னணி இயக்குனர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார்

தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற மாபெரும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

இது ஒருபக்கம் வெப் சீரியஸ் பக்கமும் தற்பொழுது தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் காஜல்அகர்வாலை வைத்து லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரியஸ் ஒன்றை எடுத்திருந்தார் OTT இணையதளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தைப் பற்றி பேசினார் அதில் அவர் கூறியது படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு  12 அல்லது 15 ல் முடிந்துவிடும் என கூறினார்.

அதன் இறுதி கட்ட முடிந்த பிறகே படம் ரிலீஸ் செய்வதற்கான தேதியை முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் அஜித்தின் வலிமை படத்தை பற்றியும் பேசினார் ரசிகர்கள் எப்படி வலிமைப்படத்திற்காக எப்படிகாத்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களைப் போல நானும் மிக தீவிரமாக காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment