இரட்டை வேடத்தில் களமிறங்கும் கார்த்திக் வெறித்தனமான அப்டேட் இதோ.!

தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நடிகரான சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு திரையுலகில் நடிக்க வந்தவர் தான் கார்த்தி இவரது முதல் திரைப்படமான பருத்திவீரன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைதந்ததால் அதனை தொடர்ந்து  பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

மேலும் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுள்தான் திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து விட்டது இந்த திரைப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இந்த திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இதனை அடுத்து கார்த்தியின் 22 வது படத்தை இரும்புத்திரை,ஹீரோ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் மித்திரன் இயக்க உள்ளாராம் மேலும் இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் பூஜை சமீபத்தில் நடைபெற்றது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கார்த்திக் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம் த்ரில்லர் கதை களம் கொண்ட இந்தத் திரைப்படம் முழுமையாக உருவாக உள்ளதாம்.

karthik

தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 26ஆம் தேதி படம் தொடங்கவுள்ளதாக இணையதளத்தில் தகவல் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version