பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த பாலாவின்.. முதல் பதிவு இதோ. இன்னும் கப்பு வேணும் போல..மக்களிடம் புலம்புகிறா.?

பல தடைகளைத் தாண்டி விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சி மக்களின் இக்கட்டான சூழ்நிலையில் சற்று சந்தோஷ பட வைத்துள்ளது.

வழக்கம் போல பிக்பாஸ் தொகுப்பாளராக கமலஹாசன் சிறப்பாக வழிநடத்திச் சென்றார். பிக் பாஸ் சீசன் 4-ல் 18 பேர் பங்குபெற்றனர் இதில் இறுதி கட்டத்திற்கு 5பேர் நுழைந்தனர். அதில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா பாண்டியன் மற்றும் சோம் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் 4 இறுதி கட்டத்தை எட்டியது இதில் கொஞ்சம் கொஞ்சமாக ஐவரில் ஒருவர் ஒருவராக வெளியேறினார் கடைசியாக ஆரியும், பாலாவும் இருந்தனர்.

இதில் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 கோடி வாக்கு வித்தியாசத்தில்  டைட்டில் வின்னர் ஆனார் ஆரி.

இரண்டாம் இடத்தை பாலாஜி பிடித்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே பாலாஜி முதல் பதிவை வெளியிட்டு உள்ளார்.

இதில் அவர் கூறியது எனக்கு விழுகின்ற ஒவ்வொரு ஓட்டும் கப்பு தான் என கூறி உள்ளார். மேலும் இது ஒரு அற்புதமான பயணம், எனக்கு ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் நேரமும் எனக்கு பாசிட்டிவ் பதிவிட்டார்.

Leave a Comment