நடிகர் விவேக்கின் கடைசி பதிவை பார்த்து கதறி அழும் ரசிகர்கள்.! அவர் கடைசியாக யாருக்கு நன்றி சொன்னார் தெரியுமா முழு விவரம் இதோ

சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா தொடங்கி இளம் நடிகர்கள் படங்கள் வரை நடித்து அவர்களுக்கு உறுதுணையாக நின்று வெற்றி படமாக கொடுக்க முனைப்பு காட்டியவர் நடிகர் விவேக்.

இவர் இதுவரையிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார் மேலும் அந்த படங்களில் விழிப்புணர்வையும் மகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லியும் வந்தவர்.

இதனால் இவர் பல விருதுகளை தன்வசப்படுத்தினார் என்பதும் நாம் அறிந்த ஒன்று தான் இப்படி சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி தன்னால் முடிந்தவற்றை செய்து வந்த விவேக் திடீரென இன்று உயிரிழந்தது பலரையும் அழ வைத்துள்ளது.

ஒருபக்கம் ரசிகர்கள் விவேக்கின் இறப்புச் செய்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பற்றிய தகவல் மற்றும் புகைப்படம் வீடியோ என பகிர்ந்து வருகின்றனர் இப்படி இருக்க நடிகர் விவேக் கடைசியாக என்று மருத்துவர்களுக்கும் நன்று கூறி ஒரு டுவிட் செய்த பதிவு தற்போது மேலும் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

காரணம் அதுவே அவரது கடைசி பதிவாக அமைந்ததுதான் என்று கூறுகின்றனர் இவர் சமீபத்தில் கோரோன்னா தடுப்பூசி போட்டுக்கொண்டார் அதற்கு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதன்பிறகு இவர் மாரடைப்பால் காலமானார். இவர் கடைசியாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மேலும் மக்களும் பயப்படாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் என கூறினார்.

அதன்பிறகு தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் எனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவர்களுக்கு நன்றி ஓமாந்தூரார் மருத்துவர் ஜெயந்தி, ஆனந்த் ரமேஷ் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார் இதுவே அவரது கடைசி பதிவாக இருந்ததால் அந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் கண் கலங்கி அழுது வருகின்றனர்.

Leave a Comment