மரணத்தின் விளிம்பில் ஹேமா… முட்டி போட்டுக் கொண்டு கெஞ்சும் பாரதி.! கண்ணீரில் மிதக்கும் கண்ணம்மா.. சோகத்தில் பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட்..

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளி பரப்பப்பட்டு வந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் விறுவிறுப்பான கட்டத்தை பாரதி கண்ணம்மா சீரியல் தற்பொழுது எட்டியுள்ளது பாரதி மற்றும் கண்ணம் ஆகியவர்கள் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ்ந்தன.

அதன் பிறகு அவர்களைப் பற்றிய உண்மை தெரிய வர எப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக இருந்து வந்தது இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சமீபத்தில் எபிசோடில் பாரதி வெண்பாவை திருமணம் செய்ய முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதிய வெறுத்தனர் பின்பு வெண்பாவிற்கு ரோகித் உடன் திருமணம் நடந்து விட்டது.

இந்த நிலையில் லட்சுமிக்கு ஏற்கனவே தன்னுடைய தங்கை ஹேமா என்பதும் பாரதிதான் அப்பா என்பதும் தெரியும். இந்த நிலையில் குழந்தை ஹேமா தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்பதால் தன்னை ஆசிரமத்தில் விட சொல்லி அனைவரையும் வற்புறுத்துகிறார் அப்பொழுது கண்ணம்மா நீ எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தைதான் உன்னை யாரோ ஆசிரமத்தில் தூக்கிக் கொண்டு விட்டு விட்டார்கள் அதன் பிறகு தான் உன்னை உன் தந்தை வளர்த்தார்.

மற்றபடி நான் தான் உன் அம்மா என உண்மையை போட்டு உடைத்து விட்டார் மேலும் ஹேமாவை கடத்தி  செல்லும் வெண்பா கும்பலிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் கண்ணமா ஈடுபட்டார் பின்பு டி என் ஏ சாம்பிள்கள் டெஸ்ட் பண்ணிய டாக்டர் குழந்தைகள் அவருக்கும் கண்ணம்மாவுக்கும் பிறந்தவர்கள் தான் என உறுதிப்பட கூறியுள்ளார் கண்ணீருடன் ஓடி வந்த பாரதிக்கு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

ஏனென்றால் அதற்குள் ஹேமா மாடியில் ஏறி நான் குதிக்க போகிறேன் என்னோட அப்பா யார் என ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார் இறுதியாக அந்த இடத்திற்கு வந்த பாரதி நான் தான் உன் அப்பா கண்ணம்மா தான் நான் தாலி கட்டின மனைவி என சொல்லி தடுத்து நிறுத்துகிறார். ஆனால் அந்த குழந்தை நீங்கள் பொய் சொல்கிறீர்கள் ஒவ்வொரு முறையும்  போய் மேல் பொய் கூறுகிறீர்கள் எனக் கூறுகிறார் பின்பு லட்சுமி நீ சொல்லு என ஹேமா லட்சுமி பார்த்து கேட்க ஆமாம் பாரதி தான் உன்னுடைய அப்பா கண்ணம்மா தான் உன்னுடைய அம்மா என லட்சுமி கூறுகிறார் உடனே ஹேமா தனது மனதை மாற்றிக் கொள்கிறார்.

இந்த நிலையில் குழந்தைக்கு உண்மை தெரிந்து விட்டது பாரதியும் கண்ணம்மாவை ஏற்றுக் கொண்டு விட்டார் அதனால் சீரியல் முடியே இருக்கிறது என தெரிகிறது. இனி அடுத்த சீசன் தொடங்கும் என தெரிகிறது இருந்தாலும் யாருமே என்னை நம்பவில்லை ஒரு டிஎன்ஏ ரிபோர்ட் பேப்பரை தான் நம்புகிறீர்கள் அப்படி என்றால் என் மீது நம்பிக்கை இல்லையா என கண்ணம்மா பாரதி மீது கோபித்துக் கொண்டு சென்றுவிடுவார்  இன்னும் கொஞ்ச காலம் கண்ணம்மா பின்னால் தான் பாரதி சுற்றுவார். அதனால் வெண்பா ஏதாவது சூழ்ச்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment