இவன் அதற்கு சரிப்பட்டு வரமாட்டான் .! கேவலமாக பார்த்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த ஏ ஆர் ரகுமான்…

தமிழ் சினிமாவில் ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். அவர் சினிமாவில் வருவதற்கு முன்பு கிராமத்து இசையை மட்டும் கண்டு வந்த ரசிகர்களுக்கு ரோஜா திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த இசையை வெளிபடுத்தி ரசிகர்களை ஈர்த்தார் அதுமட்டுமல்லாமல் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் இசையமைத்து வந்த ஏ ஆர் ரகுமானை ஒரு இயக்குனர் என்னுடைய படத்திற்கு அவன் செட் ஆக மாட்டான் என்று கூறிவிட்டார். அவர் வேற யாரும் இல்லை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான். இவருடைய படங்களில் பெரும்பாலும் இளையராஜா அவர்கள் தான் இசையமைத்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சமயத்தில் இருவருக்கும் மன கஷ்டம் ஏற்படவே இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு தன்னுடைய படத்தில் யாரை இசையமைக்க வைக்க வேண்டும் என்று யோசித்து இருந்த நேரத்தில் வைரமுத்து அவர்கள் ஏ ஆர் ரகுமானை சிபாரிசு செய்து இருக்கிறார்.

ஆனால் அதற்கு பாரதிராஜா அவர் இந்த படத்திற்கு செட் ஆக மாட்டார் அதுமட்டுமல்லாமல் இது கிராமத்து படம் என்பதால் அவருக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று வைரமுத்து விடம் கூறியிருக்கிறார். ஆனால் வைரமுத்து ஏ ஆர் ரகுமான் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததால் ஏ ஆர் ரகுமான் நீங்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்வார் என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு பாரதிராஜா ஏ ஆர் ரகுமானை கமிட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்தும் இசை எதுவும் வராததால் கடுப்பில் இருந்த பாரதிராஜா வைரமுத்துவிடம் கேட்டு இருக்கிறார் ஆனால் அப்பவும் ஏ ஆர் ரகுமான் மீது நம்பிக்கை வைத்திருந்தார் வைரமுத்து. அதன் பிறகு அந்த படத்திற்கான இசை மற்றும் பாடல்களை முடித்து பாரதிராஜா கையில் கொடுத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான் அதை கேட்ட உடனே பாரதிராஜாவிற்கு கொள்ளை கொள்ளாத இன்பம் வந்திருக்கிறது.

அந்த படம் தான் கிழக்கு சீமையிலே இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் பாரதிராஜா எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்ததால் மெய் சேர்த்துப் போனதாக கூறப்படுகிறது.

Leave a Comment