ரசிகர்களை பயமுறுத்திய “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் ஒட்டுமொத்தமாக அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் காலத்திற்கு ஏற்றவாறு படங்களை எடுத்தால் மட்டுமே ஓடும் அதை மறந்துவிட்டு ஒரு சில இயக்குனர்கள் சற்று வித்தியாசமாக அட்வான்ஸாக யோசித்து சிறப்பான படத்தை எடுக்கின்றனர் ஆனால் அந்த படங்கள் மக்கள் மத்தியில் அப்பொழுது வெற்றி பெறவில்லை என்றாலும்..

காலப்போக்கில் அந்த படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் பார்த்து கொண்டாடி அந்த படத்தை பற்றி காலம் காலமாக பேசுவது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்கள் இருக்கின்றன அதில் ஒரு படத்தைப் பற்றிதான் தற்போது பார்க்க இருக்கிறோம் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

இந்த படம் சோழர்களை சம்பந்தமாக வைத்து ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக எடுத்திருப்பார்  செல்வராகவன் இந்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து ஆண்ட்ரியா, ரீமா சென் மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருந்தார்.

2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதன் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இந்தப் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தை பற்றி இன்றும் பேசி வருகின்றனர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகம் கூட உருவாக இருப்பதாக செல்வராகவன் அண்மையில் தெரிவித்தார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 2009ஆம் ஆண்டு வெளிவந்து எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சுமார் 53 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment