இனிமே இந்தியாவோட ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவரா தான் இருக்கணும்.! சேவாக் பரபரப்பு பேட்டி

20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது இதனால் இந்த நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்கள் பலர் விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான  சேவாக் சமீபத்தி பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. பிரித்வி ஷாவுக்கு நியூசிலாந்து எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்காததை குறித்து அவர் பேசியுள்ளார் பிரித்வி ஷாவை நான் நியூசிலாந்து தொடரில் பார்க்க வேண்டும் ஏன் அவருக்கு 20 ஓவர் அல்லது ஒரு நாள் தொடரில் இடம் கொடுக்கவில்லை என்று புரியவில்லை..

பிசிசிஐ தேர்வு குழுவின் கவனத்தில் இவரும் இருக்கிறார் என்று நினைக்கிறேன் ஆனால் ஏன் வாய்ப்பு கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்று கேள்விகள் நான் மட்டுமல்ல பலரும் எழுப்புகின்றனர்.  vஇவரை இந்திய ஜெசிகள் விரைவில் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்..

துவக்க வீரராக களம் இறங்க 150 ஸ்டைக் ரேட் அதிகமாக விளையாடுகிறார் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு தகுதியான வீரராக இவர் இருப்பார் தற்பொழுது இவருக்கும் வீரர்கள் திணறும் போது இவரை பயன்படுத்தலாம் நடந்து முடிந்த உலக கோப்பை அதற்கு உதாரணம் மேலும் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்திய மைதானத்தில் அவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.. உள்ளூர் போட்டியில் விளையாடுவது கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் இவரை நிச்சயம் அணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் மேலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment