jersey no 45 – யை கைபற்ற இவர் தான் காரணம்.! மனம் திறந்த ரோஹித்.

இந்திய அணியில் தற்போது அதிரடி வீரராக காணப்படுபவர் ரோகித் சர்மா. இந்திய அணியில் சேவாக் விற்கு  பிறகு  சிறந்த அதிரடி வீரர் என்றால்  நமது நமகதிற்கு உடனே வருபவர் இவர் தான்.அந்த அளவிற்கு தனது அதிரடியை காட்டக் கூடியவர்.

ஆரம்பத்தில் ஒரு சில பந்துகளை நிதானமாக கையாண்ட பின் தனது அதிரடியை பல மடங்கு காட்டக் கூடியவர் மற்றும் கிரிக்கெட்டை மிக சுலபமாக விளையாடக் கூடியவர்.இதனால் என்னவோ மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு இவர் பிடித்துப்போன நபராக இன்று வரையிலும் இருந்து வருகிறார் மேலும் இவர் ஐபிஎல் -லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் அந்த அணிக்காக 4 முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

இவர் ipl ல் சிறந்த  கேப்டன்ஷிப்பை வெளிபடுத்தினார் அதன் விளைவாக இந்திய அணியில் 20 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அவ்வபொழுது கேப்டனாக இருந்து வருகிறார். இருப்பினும் நிலையான கேப்டன்ஷிப் இவருக்கு கிடைக்கவில்லை ஆனால் இவருக்கு வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் ரோஹித்துக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

rohit
rohit

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள ரோகித் சர்மா ரசிகருடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அப்படி உரையாடிக் கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஜெஸ்ஸி நம்பர்  45 வழங்கப்பட்டது என கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா எனது அம்மா தான் அந்த நம்பர் ராசியாக இருக்கும் என கூறினார்.

நான் எதுவும் கேட்காமல் உடனே அந்த நம்பரை தேர்வு செய்தேன் என கூறினார் மேலும் தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது மற்றொரு ரசிகர் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஓய்வு பெற்ற இரண்டு வீரர்களை எடுக்க விரும்பினால் நீங்கள் யாரை எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த ரோகித் நான் இந்திய அணியின் ஜாம்பவானான சச்சின் மற்றும் பொல்லாக் ஆகிய இரண்டு வீரரை தேர்வு செய்வேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.

Leave a Comment