பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒலிக்கும் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.! வைரலாகும் புகைப்படம்.

கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் பிக் பாஸில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பலரும் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அதேபோல் ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிளும் ஏதாவது ஒரு முக்கிய பிரபலம் மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வருடம் ஆறாவது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு இரண்டு கழிப்பறை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது அதனால் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமே அசத்தலாக ஆரம்பித்துள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில்  ரசிகர்களின் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் ஜிபி முத்து கலந்து கொண்டதால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் அமுதாவாணன், ஜி பி முத்து, சாந்தினி, ஜனனி ,ஆயிஷா, ராபர்ட், ரட்சிதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸில் ஒரு கம்பீரக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த குரல் யாருடையது என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் பலருக்கும் இந்த குரல் யாருடையது என தெரியாமல் இருந்திருக்கும். அதுுு மட்டும் இல்லாமல் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரரான இவரின் பெயர் சச்சிதானந்தம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சிறந்து விளங்கி வருகிறார்.

இதுவரை பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இவர்தான் என தெரிந்து கொண்டது பலருக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

bigg boss 6
bigg boss 6

Leave a Comment