அஜித், விஜய்யை விட அதிக வரி செலுத்தும் ஒரே நடிகர் இவர்தான்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் கன்னட நடிகர் ஆன சிவராஜ்குமார் அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி தொடர்ந்து வரி செலுத்தி வருவதால் அவரை கௌரவிக்க சென்னை வருமானவரித்துறையினர் விருது வழங்க உள்ளனர். ஆம் சென்னையில் நேற்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது. அதை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஐஸ்வர்யா தனது தந்தை சார்பில் அந்த விருதை ஏற்றுக்கொண்டார்.

உயர்ந்த மற்றும் உடனடி வரி செலுத்துபவரின் பெருமைக்குரிய மகள் அன்று அப்பாவை கௌரவித்த தமிழக மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறைக்கும் மிக்க நன்றி என்றும் அவர் கருத்துக்கு தலைப்பிட்டு அந்த விருதை பெற்றுக்கொண்ட சில புகைப்படங்களையும் சேர்த்து பகிர்ந்து உள்ளார்.

இந்த செய்தியை ஐஸ்வர்யா பகிர்ந்த உடன் ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர். இதற்கிடையில் ரஜினிகாந்த் தற்பொழுது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற புதிய படத்திற்காக இணைந்துள்ளார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் சமீபத்தில் இப்படத்திற்காக டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க எவ்வளவு சம்பளம் வாங்கியிருந்தாலும் அதற்கு சரிபங்காக வரி செலுத்தி வருவதால் இவரை கௌரவப்படுத்தினர். ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள்.

Leave a Comment