250 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மிரட்டிய ஒரே நடிகர் இவர்தான்.! இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனை..

சினிமாவைப் பொறுத்தவரை தற்பொழுது பல பிரபலங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள் ஆனாலும் தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த காலத்திலேயே 250 படங்களில் ஹீரோவாக நடித்து மிரட்டி உள்ள ஒரு முன்னணி நடிகரைப் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

250 படங்களில் ஹீரோவாக நடித்து மிரட்டியவர் வேறு யாரும் கிடையாது நடிகர் சிவாஜி கணேசன் தான் இவர் முதன் முதலில் நாடக கலைஞராக தான் அறிமுகமானார் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் பராசக்தி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே தரமான நடிகர் என்ற பெயரை எடுத்தவர்.

அதுமட்டுமில்லாமல் அப்பொழுது உள்ள ரசிகர்களை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் அதன் பலனாக இவர் பக்கம் பல திரைப்படங்கள் திரும்பியது. அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட் வரிசையில் இணைந்தது. இவருக்கு ஈடு இணையாக நடிப்பதற்கு ஆளே இல்லை என்ற அளவிற்கு பெரும் புகழையும் பெற்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நவராத்திரி, கர்ணன்,, தெய்வமகன் திருவிளையாடல், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், என பல திரைப்படங்கள் இப்பொழுது உள்ள நடிகர்களாக கூட நடிக்க முடியாது என்ற அளவிற்கு அவர் நடிப்பு அற்புதமாக இருக்கும்.

அதேபோல் தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி முழுமையான நடிப்பை வெளிப்படுத்துவார். சிவாஜி கணேசன் இதுவரை 288 திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் 250 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மிரட்டி உள்ளார். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் ஆவது இவர் திரைப்படம் வெளியாகும் அந்த அளவு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டே இருந்தார்.

தொடர்ச்சியாக ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்த சிவாஜி கணேசன் படத்தில் நடிக்கும் பொழுது ஒரு நாள் கூட படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததே கிடையாதாம். அந்த வகையில் பல பேட்டிகளில் இப்பொழுது உள்ள தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் பலமுறை பேட்டியில்   இன்றைய இளம் ஹீரோக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

அதேபோல் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆர் அவர்களை அசந்து போனாராம் இவர் நடிப்பை பார்த்து வியந்தாரம் இவர் நடிப்பிற்கு ஈடு இணை யாருமே கிடையாது எனக் கூறினாராம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இவரின் நடிப்பு தனித்தவமாக   பேசப்படும் எனக் கூறப்பட்டது. இன்றைய இளம் நடிகர்கள் ஒரு படத்தில் நடித்து ஹிட் கொடுத்து விட்டாலே அடுத்த படத்திற்கு இயக்குனர்களை காக்க வைப்பார் ஆனால் 250 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக சென்றது இல்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்றைய பல முன்னணி நடிகர்களும் சிவாஜி கணேசனின் இந்த சாதனையை முறியடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.

Leave a Comment