பல தயாரிப்பாளர்களை தலையில் துண்டு போட வைத்தவர் இவர் தான்.! செல்வராகவனை பங்கம் செய்த பிரபலம்.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு இருக்கிறவர் இயக்குனர் செல்வராகவன். மேலும் இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான சமயத்தில் நன்றாக ஓடாத காரணத்தால் இந்த படத்தின் தயாரிப்பாளர் அதிகம் கடன் வாங்கி அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மயக்கம் என்ன என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் கலையான விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது தம்பியை வைத்து அதாவது நடிகர் தனுஷை மைத்து மீண்டும் நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் செல்வராகவன். இந்த படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலில் செம்ம அடி வாங்கியது.

ஏனென்றால் செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதால் நானே வருவேன் திரைப்படம் மிகவும் மோசமாக வசூலில் அடி வாங்கியது இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் அதிக கடன் வாங்கி அடைக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பிரபல மூத்த தயாரிப்பாளர் ஒருவர் கமலஹாசனை பற்றி படு கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

அதாவது பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் பல இடங்களில் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை தெளிவாக கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் செல்வராகவனை கேவலப்படுத்தி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

செல்வராகவன் அவன் பல தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை காலி செய்தவன். அது மட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தயாரிப்பாளரை இவர்தான் காலி செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் பல குடும்பத்தை பல இயக்குனர்களின் வாழ்க்கையை இவர் காலி செய்து இருக்கிறார் என்று தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment