நூலிழையில் தப்பித்த மணிகண்டா.. எதிர்பாராத திடீர் திருப்பம்.! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர் இவர்தான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் ஒவ்வொரு வாரமும் இந்நிகழ்ச்சியில் இருந்து ஏதாவது ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திடீரென்று ஒருவரை வெளியேற்றிய உள்ளார்கள்.

மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் யார் மிகக் குறைந்த அளவிற்கு ஓட்டுகளை பெறுகிறார்களோ அவர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிக்கே, ரட்சிதா, மணிகண்டா ஆகிய 6 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள்.

இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்ற மணிகண்டா இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது ஆனால் சற்று எதிர்பார்க்காத நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏடிக்கே வெளியேறிய உள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஏடிகே சில நாட்களாக ஆவேசமாக விளையாடி வருகிறார் மேலும் அடிக்கடி அசீமை அசிங்கப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தார் எனவே இந்த வார திடீரென வெளியேற்றப்பட்டுள்ளார் இது பிக்பாஸ் பார்வையாளர்களின் மத்தியில் பெரிதும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அசீமுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் சரியோ தவறோ அவர் மனதில் பட்டதை செய்து வரும் நிலையில் ரசிகர்களுக்கு அது பிடித்துள்ளது ஆனால் சாகப் போட்டியாளர்களுக்கு அசீமை பிடிக்காது என்பது தெரிந்த ஒன்றுதான் மேலும் பலரும் எப்படி இந்த அளவிற்கு அசீமுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என வியப்பில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment