தேவைக்காக பழகும் ரஜினி, நம்பர் ஒன் சுயநலவாதி இவர்தான்.! பேட்டியில் புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்…

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி அவர்கள் இணை இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் ஒன்னாம் நம்பர் சுயநலவாதி என்று பிரபல நடிகர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது ஒரு படத்திற்கு 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இந்த நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் யாருக்காக இருந்தாலும் உதவி செய்ய முன்வர மாட்டார் என்று ஒரு பெரும் சர்ச்சை சமீபத்தில் வெடித்து இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் ஒரு பேட்டியில் நடிகர் ரஜினியை பற்றி பல தகவல்களை கூறியிருந்தார் அப்போது அவர் ஏழைகளின் பக்கம் நிற்கவே மாட்டார் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் ஒரு சில நடிகர்கள் தங்களுடைய சுயநலத்தை மட்டும் தான் முதலில் பார்ப்பார்கள் அந்த மாதிரி தான் நடிகர் ரஜினியும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தனது சொந்த ஊரான கர்நாடகாவில் பல கோடி சொத்து மதிப்பு சேர்த்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான் இவர் கூறிய அந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment