இந்திய அணியில் அபாயகரமான வீரர் இவர் தான் – ரிஷப் பண்ட் கிடையாது.! ரோஹித் பேட்டி.

இந்தியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டேஸ்ட் ஒருநாள் போட்டி, 20 – 20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாண்டது. முதலில் இந்திய அணி டெஸ்ட் போட்டி விளையாண்டது அதில் தோல்வியை சந்தித்தாலும். அடுத்ததாக ஒரு நாள், 20 – 20 என இரண்டு தொடரிலும் ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றியை கைப்பற்றி உள்ளார்.

முதலில் 20 20 தொடரை கைப்பற்றிய ரோகித் சர்மா ஒரு நாள் போட்டியை சந்தித்தனர் இரண்டு போட்டியில் ஆளுக்கு ஒன்னு ஒன்னு இருந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி நடந்தது இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு நாள் தொடரை வெல்வார்கள். டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் மௌலியை தேர்வு செய்தார்.

தொடக்கத்திலேயே அதிரடியாக இங்கிலாந்து அணி விளையாண்டாலும் மட மடவென  ஒரு பக்கம் விக்கெட்டுகளை சரிந்தது. கடைசியாக இங்கிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை கொடுக்க பின் வந்த பேட்ஸ்மேன்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த பின் போகப்போக அதிரடியை காட்ட ஆரம்பித்தனர் ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் இருக்கும்போது அவுட்டானார் அவருக்கு பிறகு ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 100 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி வெற்றியை ருசித்தது கோப்பையை கைப்பற்றிய பிறகு பேசிய ரோஹித் சர்மா இந்தியா அணியில் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர் குறிப்பாக ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா மிடில் ஆர்டரில் மேட்ச் வின்னர்களாக திகழ்கின்றனர் என புகழ்ந்து பேசினார் மேலும் பேசிய அவர் இந்திய அணியில் சுழல் பந்து  வீச்சாளராக திகழும் சாஹல். ஒரு டேஞ்சரான பந்துவீச்சாளர் அவரது பந்து ஈசியாக இருப்பது போல் தான் தெரியும் ஆனால் அவருக்கு மடமடவென விக்கெடுகள் விழுகிறது என பேசினார் ரோஹித் சர்மா.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment