விஜய் மகன் இயக்கப் போகும் முதல் திரைப்படத்தில் இவர் தான் ஹீரோ..! அடிச்சி சொல்லும் சந்திரசேகர்..!

தமிழ் சினிமாவில் தளபதி என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவது மட்டுமில்லாமல் இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆனது தல அஜித் நடிப்பில் வெளிவர உள்ள துணிவு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் வெளியாவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படங்களுக்குள் ஏகப்பட்ட போட்டிகள் உருவாகிவிட்டது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தளபதி மகன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவை சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் மகன் சஞ்சய் முதன்முதலாக வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் “நான் அடிச்சா தாங்க மாட்ட” என்ற பாடல் மூலமாக சினிமாவில் முகம் கட்ட ஆரம்பித்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் அவர் முகம் காட்டுவார் என்று நினைத்த நிலையில் அவர் சினிமா சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவு படிப்பு ஒன்றை படித்து விட்டு தற்பொழுது இயக்குனராக களம் இறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சந்திரசேகர் அவர்கள் தன்னுடைய பேரனான சஞ்சய் குறித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார் அதாவது அவர் கூறியது என்னவென்றால். அவருடைய பேரணியிடம் என்னடா உனக்கு நீ டைரக்ட் பண்ணனும்னு நினைக்கும்போது உனக்கு ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் இருக்காரு நீ ஈசியா டைரக்டர் ஆகிடலாம் என்று கூறினார்.

அந்த வகையில் தளபதி விஜய் வைத்து திரைப்படம் இயக்கினால் கண்டிப்பாக ஓடிவிடும் என்ற எண்ணத்தில் தான் அப்படி கூறினேன் ஆனால் சஞ்சய் என்னிடம் இல்லை தாத்தா நான் விஜய் சேதுபதி வைத்து தான் திரைப்படம் இயக்குவேன் என்று கூறிவிட்டாராம்.

vijaysethupathi-01
vijaysethupathi-01

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி வைத்து படம் இயக்கிய பின் சிறந்த இயக்குனராக வலம் வந்த பிறகுதான் நான் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு சஞ்சய் இருக்கிறார் என சந்திரசேகர் கூறியது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலாக பரவி வருகிறது.

Leave a Comment