சினிமா உலகில் நடிகைகளை அழகாக காட்ட கூடிய இயக்குனர்களில் ஒருவர் இவர்.? என்னையும் அழகாக காட்டியுள்ளார் பிரபல இயக்குனரை புகழ்ந்து தள்ளும் – நடிகை சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலரும் சைலண்டாக இருந்துகொண்டு டாப் நடிக்கர்கள் படங்களை கைப்பற்றி நடித்து வருகின்றனர் அந்த வகையில் மாடல் அழகி சாக்ஷி அகர்வால்.  குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தாலும் ரஜினியின் காலா அஜித்தின் விசுவாசம் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்ததால் மக்கள் மத்தியில் தென்பட ஆரம்பித்தார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சமீபகாலமாக குட்டி திரைப் படங்களில் தலைகாட்டி வந்த சக்ஷி அகர்வாலை சுந்தர் சி ஹீரோயினாகவே ஆகிவிட்டாராம் அரண்மனை மூன்றாம் பாகத்தில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தியவர் சக்ஷி அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசி கண்ணா போன்றவர்களிடம் போட்டி  போட்டு நடித்திருக்கிறார்.  இந்த திரைப்படத்தில் விவேக், யோகி பாபு, சம்பத், மனோபாலா போன்றவரும் அற்புதமாக நடித்து இருந்தனர் . இந்த திரைப்படம் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் அடித்து நொறுக்கி வருகிறது.

இந்த நிலையில் அரண்மனை 3 படம் குறித்தும் இயக்குனர் சுந்தர் சி குறித்தும்  சாக்ஷி அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியது அரண்மனை 3  படத்தில் நடித்தது நல்ல அனுபவம் எனக்கு இயக்குனர் சுந்தர் சி திறமையானவர் படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது ஒரு படத்தை இயக்கி நடிப்பது என்பது கடினமான விஷயம் அதை சிறப்பாக செய்து காட்டி உள்ளார் நடிகர் இயக்குனர் சுந்தர் சி.

இந்த திரைப்படத்தில் பல நடிகர் நடிகைகள் ஒருங்கிணைந்து நன்றாக வேலை வாங்கினார். மேலும் அவருடைய படங்களில் நடிகைகளை அழகாக காண்பிப்பது போல மிகவும் என்னை அழகாக காண்பித்தார் சரியாகத் திட்டமிட்டு படத்தை அழகாக எடுத்திருக்கிறார் தற்போது தியேட்டரில் கூட நல்ல வரவேற்பு ரசிகர் மத்தியில் இருக்கிறது என்று கூறினார்.

sundar . c
sundar . c

Leave a Comment