இயக்குனர் ராஜமௌலிக்கு பிடித்த “தமிழ் ஹீரோ” இவர் தானாம்.! வாய்ப்பு கிடைத்தால் படம் எடுக்க ரெடியாம்.. ரஜினி, கமல் கிடையாது

பிரம்மாண்டம் என்றால் நாம் நினைவுக்கு வரும் முதல் பெயர் ராஜமௌலி தான். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களை எடுத்து வந்தாலும் பிரபாஸை வைத்து இவர் எடுத்த பாகுபலி படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவானது வெளிவந்து 500 கோடிக்கு மேல் வசூல் பேட்டை நடத்தியது.

உடனடியாக பாகுபலி இரண்டாவது பாகமும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த முறை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது. அதனை தொடர்ந்து ராஜாமௌலியின் ஒவ்வொரு படமும் 500 கோடி மேல் தான்  பட்ஜெட்  இருந்து வந்துள்ளன கடைசியாக இவர் எடுத்த  RRR திரைப்படமும்..

ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலி தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ்பாபு உடன் கூட்டணி அமைத்து. ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார் அந்த படம் அட்வென்சர் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ராஜமௌலி..

சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் சொன்னது எனக்கு தமிழில் பிடித்த திரைப்படம் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் எனக் கூறினார் வெற்றிமாறனை எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவில் தனுஷையும் பிடிக்கும் என கூறினார்.

தனுஷின் இந்த வளர்ச்சிக்கு திறமை மட்டுமே காரணம்..  ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷ் தத்ரூபமாக நடித்திருப்பார் அவரை தவிர வேறு யாரும் அந்த அளவிற்கு அழகாக நடித்திருக்க மாட்டார் என கூறினார். தமிழ் நடிகர்களில் நடிகர் தனுஷை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் அவருடன் இணைந்து படம் பண்ண வாய்ப்பு கிடைத்தால் உடனே அதை பண்ணுவேன் என தனது ஆசையை சொல்லி உள்ளார்.

Leave a Comment