கிரிக்கெட் வீரர் சச்சின் உடன் சாய்பல்லவி எடுத்த இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா.! அதுவும் எப்படி இருக்கிறார் பாருங்க.

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் சாய் பல்லவி இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

ஆம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானது தியா எனும் திரைப்படம் மூலம் தான் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தனுஷ்,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார் அதிலும் குறிப்பாக இவர் மாரி 2 திரைப்படத்தில் கோலிசோடாவே என்ற பாடலுக்கு நடனம் ஆடியது தற்போது வரை ரசிகர்களால் மறக்க முடியாது.

தற்பொழுதும் அந்தப் பாடலைப் பார்த்தால் இவர் நடனமாடியது தான் ரசிகர்களுக்கு உடனே ஞாபகம் வருகிறது என பலரும் கூறுகிறார்கள் மேலும் சாய்பல்லவி தற்போது பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார் பொதுவாகவே இவர் தமிழில் இன்னும் நிறைய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காக பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி விட்டார்கள் ஏனென்றால் இவர் இந்த புகைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சச்சினுடன் இவர் எப்பொழுது புகைப்படம் எடுத்தார் எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என கூறி வருகிறார்கள்.

sai pallavi2
sai pallavi2

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ஆட்டத்தை பார்ப்பதற்கு தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் இப்படி இருக்கும் நிலையில் இவர் எப்பொழுது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் என யோசித்து வருகிறார்கள்.

Leave a Comment