சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருப்பதியில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்கள் உடைய திருமணத்தின் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் மேலும் இவருக்கு மகன் ஒருவரும் இருக்கிறார். அதேபோல ரவீந்தரும் முதல் மனைவியை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் ஏராளமான விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இதற்கு பெரிதாக மகாலட்சுமி பதில் அளிக்கவில்லை என்றாலும் ரவீந்தர் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அனைத்து விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரவீந்தர், மகாலட்சுமி தற்பொழுது தங்களுடைய ஹனிமூன் கொண்டாடுவதற்காக தேனிலவு சென்றுள்ளார்கள்.
தனி எலிகாப்டரில் சென்று உள்ள இவர்களுடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என பலரும் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் மகாலட்சுமி ஒரு மாதத்திற்க மூன்றிலிருந்து நான்கு லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறி அனைவரையும் வாயடைக்க வைத்தார்.
மேலும் ரவீந்தர் குண்டாக இருப்பதால் யாரும் உருவ கேலி செய்யாதீர்கள் உங்கள் வீட்டில் குண்டாக இருக்கும் அக்கா, அண்ணன், தம்பியை யாராவது கேலி செய்தால் எப்படி உங்களுக்கு வலிக்குமோ அதேபோல தான் எனக்கும் இருக்கும் என கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரவீந்தர் திருமணத்தின் பொழுது தன்னுடைய அம்மா, அப்பா ஆகியோர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.