இப்படிப்பட்ட பாடல்களுக்கு அனிருத் இதுவரையிலும் சம்பளம் வாங்கியது இல்லையாம்.? வெளிவந்த நெகிழ்ச்சி தகவல்..

பொதுவாக ஒரு படத்தின் கதை மட்டும் நன்றாக இருந்தால் அந்த திரைப்படம் வெற்றி பெற்று விடாது அந்த படத்தில் இசை என்பதும் முக்கியம் எந்த திரைப்படமாக இருந்தாலும் இசை இருந்தால் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவரும் அதனை ரசிகர்களால் உணர முடியும் இவ்வாறு இசை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாக திகழ்கிறது.

அந்த வகையில் தன்னுடைய சிறந்த பாடல் திறமையினால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அனிருத். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த படத்தினை தொடர்ந்து விஜயின் கத்தி, அஜித்தின் வேதாளம், ரஜினியின் பேட்ட, கமலுடன் விக்ரம் உள்ளிட்ட பத்து ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் மேலும் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களில் திரைப்படங்களிலும் சில காட்சிகளிலும் நடித்து வரும் இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களை பாடியும் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் ஏ ஆர் ரகுமான், யுவன், டி இமான், சந்தோஷ நாராயணன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் அனிருத் பல பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள அனிருத் சம்பளமே வாங்கியது இல்லையாம்.

இவ்வாறு அனிருத் தன்னுடைய திறமையினால் உருவான பாடல்களை பாடுவதற்காக மட்டும் தான் சம்பளம் வாங்கி வருகிறாராம் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடும் பொழுது சம்பளம் வாங்குவதில்லை என சமீபத்தில் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment