பொது இடத்தில் இப்படி ஒரு வார்த்தையை விட்ட ஹரி ..? **ம்மால தூக்கி போட்டு மிதித்து விடுவேன் – அதிர்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்..!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஹரி இவர் தமிழில் ஐயா, சாமி, ஆறு, வேல், சிங்கம் போன்ற பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கியதும் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் நான் ஒரு கமர்ஷியல் கிங் என நிரூபித்த இயக்குனர் இவர்தான்.

இந்நிலையில் நமது இயக்குனர் சமீபத்தில் தன்னுடைய மாப்பிள்ளை அருண் விஜய்யை வைத்து யானை என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படமானது வருகின்ற ஜூன் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. ஆனால் முதலில் சூர்யா நடிக்க இருந்த அருவா எனும் திரைப்படத்தை தான் இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார்.

ஆனால் சில பல காரணத்தின் காரணமாக அந்த திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டு உடனடியாக யானை என்ற தலைப்பில் வேறு கதைக்களத்துடன் அருண் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு கூட நேற்று மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

அந்த வகையில் இந்த விழாவில் ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அப்பொழுது இந்த படம் பற்றி பல கேள்விகள் நமது இயக்குனரிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது இந்த திரைப்படத்தின் கதையை பற்றி நமது இயக்குனர் மிக தெளிவாக விவரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் கூறியது என்னவென்றால் ஒருவன் தன்னுடைய குடும்பத்தை தோளில் சுமந்து வருகிறார் பின்னர் நண்பனை சுமந்து வருகிறார் அப்பொழுது அவனுக்கு மிகப்பெரிய பிரச்சனை வருகிறது அப்பொழுது **ம்மால எல்லாத்தையும் தூக்கி போட்டு மிதிக்கணும் என்று உணர்ச்சிவசப்பட்டு மிகவும் கெட்ட வார்த்தையை இயக்குனர் ஹரி பேசிவிட்டார்.

உடனே அங்கு கூடியிருந்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் உடனே நமது இயக்குனரும் ஏமோஷனலில் அதுமாதிரி பேசிவிட்டேன் என்று சமாளித்து விட்டார்.

hari-1
hari-1

Leave a Comment