தோழியின் கணவருடன் ஹன்சிகா.! பலருக்கும் தெரியாத தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோட்வானி இவர் தமிழில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து ஹன்சிகா தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வதாக தற்போது ஒரு தகவல் வெளியாகிய இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தனது தொழில் பங்குதாரரான சோஹைல் கதுரியா என்பவரை நடிகை ஹன்சிகா காதலித்து வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையிள் இவர்களுடைய காதல் தற்போது திருமணம் வரைக்கும் சென்றுள்ளது.

இவர்களுடைய திருமணம் 450 வருடம் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் வருகின்ற ஏப்ரல் மாதம் இவர்களுடைய திருமணம் நடக்க இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சோகைல் கதுரியா பிரான்சில் ஈபில் டவர் முன்னாள் நின்று தனது காதலியான ஹன்சிகாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருந்தால் இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை ஹன்சிகா மோட்வானி.

இப்படி இவர்கள் திருமணம் செய்யும் போகும் நேரத்தில் தற்போது பிரபல தொழிலதிபரான சோகைள் கதுரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவரத்தானவர் என்று தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ரிங்கி என்பவரை சோகைல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். மேலும் ரிங்கி ஹன்சிகாவின் தோழி என்பதால் திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டிருக்கிறார் அந்த திருமணத்தில் மணமக்களுடன் இணைந்து ஹன்சிகாவும் நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகிய செம்ம வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்து நெட்டிசன்கள் தோழியை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நபரை காதலிக்கிறாரா ஹன்சிகா. அப்போ இவருடைய விவாகரத்துக்கு இவர் தான் காரணமா என்று எக்குத்தப்பாக பேசி வருகின்றனர்.

Leave a Comment