நான் தோழியின் கணவரை திருடி விட்டேனா.? முதன்முறையாக மனம் திறந்த ஹன்சிகா..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் இதனை அடுத்து வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1, 2, ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர் சிம்புவுடன் காதல் ஏற்பட்டதால் படங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் சிம்பு ஹன்சிகாவின் காதல் சில காலங்களிலேயே பிரேக் அப் ஆனது. இதனை அடுத்து ஹன்சிகா நடன புயல் பிரபுதேவா உடன் காதலில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அதனைப் பற்றி எந்த ஒரு உண்மையையும் தெரியவில்லை.

இந்நிலையில் இவர் தற்பொழுது தன்னுடைய நீண்ட நாள் நண்பர் பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட நபருக்கு ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் ரிங்கி இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழி.

ஹன்சிகாவின் கணவருக்கும் ரிங்கி இருவருக்கும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார் ஆனால் ரிங்கியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் சுஹைல் அவரை விவாகரத்து செய்து விட்டார். எனவே ஹன்சிகா ஏன் விவாகரத்தான ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் ஹன்சிகா தனது தோழியின் கணவரை திருடினார் என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இது குறித்து தற்பொழுது முதன் முறையாக ஹன்சிகா மனம் திறந்துள்ளார். ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாக உள்ள நிலையில் அதற்கான டீசரில் ஹன்சிகா தனது அம்மாவிடம் பேசும்பொழுது நீ தான் எனக்கு அடிக்கடி சொல்லி இருக்கிறாய் என்னுடைய கடந்த காலத்தை பற்றி பார்க்க கூடாது என்று உனக்கு ஓகே என்றால் எனக்கு அது போதும் என்று கண் கலங்கியபடி ஹன்சிகா பேசியுள்ளார்.

hansika motwani
hansika motwani

மேலும் அதில் சோஹைல் கத்துரியாவின் கடந்த காலத்தை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை என்பதையும் கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து ஹன்சிகா பேட்டி ஒன்றில் ஒரு பொது நபராக ஒருவரை விரல்களை சுட்டிக் காட்டுவது மற்றும் ஒருவரை மோசமாக உணர வைப்பது மிகவும் எளிதானது அதற்கான விளக்கத்தை  இப்பொழுதுதான் கொடுக்கிறேன்.

சோஹைல் அவரது மனைவியை பிரிவதற்கு நான்தான் காரணம் என்று சொல்வது முற்றிலும் ஆதாரமற்றது. மேலும் சொஹைல் கூறுகையில் நான் 2014இல் முதன் முறையாக திருமணம் செய்து கொண்டேன் ஆனால் எங்கள் திருமண வாழ்க்கையை குறைவாக இருந்தது நாங்கள் இப்பொழுது நண்பர்கள் மட்டுமே என்று கூறியுள்ளார்.

Leave a Comment