இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகும் தாலி அணியாமல் சுத்திய தாமரை – கேள்வி கேட்ட ஜூலி.? என்ன கூறினார் தெரியுமா.?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே அந்த பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட சில முக்கிய பிரபலங்கள் தற்போது ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி அசத்தி வருகின்றனர்.

இதற்கு முன் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் முழுவதும் நடந்தவற்றை எடிட் செய்யப்பட்டு ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் லைவாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆம் இதன் மூலம் போட்டியாளர்களில் குணாதிசயங்கள் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பது தெள்ளத் தெளிவாக மக்களுக்கு தெரியவரும்.

மேலும் ஆட்டமும் சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் ஒருவர்தான் தாமரைச்செல்வி இவர் நாடகத் துறையிலிருந்து வந்தவர். கடந்த பிக்பாஸ் சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் முதல் திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் வகையில் பின்பு இருவரும் பிரிந்து தாமரையின் மகன் முதல் கணவருடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே பின்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு அதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்தநிலையில் அண்மையில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் ஜூலி தாமரையிடம் நீங்கள் இரண்டாவது திருமணம்.

செய்து கொண்ட பிறகும் ஏன் தாலி அணியவில்லை என கேட்டார் அதற்கு தாமரை நாங்கள் கவரிங் தாலி கொண்டுதான் திருமணம் செய்து கொண்டோம் எனக்கு கவரிங் செட் ஆகவில்லை அதனால் கழட்டி வைத்துவிட்டு விட்டேன் இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற பிறகுதான் தாலி செயின் வாங்கி போடனும் என ஜூலி இடம் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version